திருச்சியில் இருந்து குளிர்சாதனப் பேருந்தில்போக வேண்டும் என்று ஆசை உந்தியது.இரு நூற்று எழுபது ரூபாய் தானே என்று ஏறி அமர்ந்தேன். விழுப்புரம் வரையில் ஆனந்தமாக உறங்கிய வண்ணம் பயணம்.விழுப்புரம் அருகே "பாத்ரூம் போறவங்க. டிபன் சாப்பிடறவங்க எல்லாம் இறங்கலாம்" என்று குரல் கேட்டு இறங்கினேன். மூன்று ரூபாய் கொடுத்து சிறுநீர் கழித்தேன்.திரும்புகையில் ஒருத்தர் கேட்டார்."சார், இந்த பாத் ரூம் என்ன ஏசியா பண்ணியிருக்கான்? "
"இல்லையே ! எதுக்கு கேட்கறீங்க?"
" இல்லை மத்த இடத்தில் எல்லாம் ரெண்டு ரூபாய்தான் வாங்குரானுவோ இவன் மட்டும் மூணு ரூவா கேக்குறான் "
அவர் வருத்தம் புரிந்தது.நீரிழிவுக்காரர்களுக்குத்தான் எவ்வளவு செலவு?
(நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சர்க்கரை வியாதிக்காரர்கள் ஒண்ணுக்குப் போக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று உத்தரவாதம் அளிக்கும் கட்சிக்குத்தான் என் வோட்டு.)
விழுப்புரம் தாண்டி கொஞ்ச நேரத்தில் ஏசி ஓடவில்லையோ என ஒரு சந்தேகம். எழுந்து போய் கண்டக்டரைக் கேட்டேன். அவரும் எழுந்து வந்து பார்த்துவிட்டு டிரைவரிடம் போய் ஆமாண்ணே ஏசி ஓடலை என்றார். அவ்வளவுதான். கோயம்பேட்டில் இறங்கும் வரை ஏசி ஓடவில்லை. வண்டிக்குள் காற்று வர வழியும் இல்லை. ஒரே நாத்தம். தூக்கமும் போய் தலைவலிதான் மிச்சம்.
சக பயணிகள் யாரும் இதைப்பற்றிக் கவலையே படவில்லை.
இனிமேல் தமிழக அரசின் "குளிர் சாதனப் பேருந்தில் "ஏறுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.
இப்படித் தான் சமயத்தில் ஆகி விடுகிறது..என்ன செய்வது?
ReplyDelete